Home இந்தியா ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு- இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்பு!

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு- இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்பு!

by admin

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார்.

 இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More