Home இலங்கை இந்திய வெளியுறவு செயலாளரை த.தே.கூட்டமைப்பு சந்தித்துள்ளது.

இந்திய வெளியுறவு செயலாளரை த.தே.கூட்டமைப்பு சந்தித்துள்ளது.

by admin

உத்தியோகபூர்வ  பயணமாக  இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்  ஜெய்சங்கரை  இன்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்   நடைபெற்ற இந்த சந்திப்பின் போது  உத்தேச அரசியல் யாப்பு தொடர்பிலேயே அதிக கவனம்; செலுத்தப்பட்டதாக தெரிவிக்க்ப்படுகின்றது.

அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக  ஜெய்சங்கர் தெரிவித்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பதலி உள்ள தாமதம் இ காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில்  எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளதாக இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில்இ நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜாஇ சுமந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன்இ சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More