Home இந்தியா சசிகலா உள்ளிட்ட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது- ஆம் ஆத்மி கட்சி:-

சசிகலா உள்ளிட்ட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது- ஆம் ஆத்மி கட்சி:-

by admin

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா உள்பட 3 பேரையும் பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என கர்நாடக சிறைத்துறை காவற்துறை ஆணையகத்துக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

தற்போதைய சூழ்நிலையில் சசிகலா உள்பட 3 பேரும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தங்களை தமிழக சிறைக்கு மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவ்வாறு மனு கொடுத்தால், நீதிபதி முதல் கட்டமாக சிறைத் துறை காவற்துறை ஆணையகத்தின் ஒப்புதலை கேட்கக்கூடும் எனவும் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் அக் கடிதத்தில தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெங்களூரில் உள்ள சிறையிலேயே வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் நீதிபதிகளிடம் வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More