Home இந்தியா ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் எதிர்ப்பையும் மீறி மோடி

ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவில் எதிர்ப்பையும் மீறி மோடி

by admin


ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி  ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.   கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஷா யோக மையத்தால் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி தினமான இன்று, இந்த சிலை பிரதமரால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  இதற்கென தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த மோடி   ,ஆதியோகி சிவன் சிலையை ஜோதி ஏற்றி, திறந்து வைத்தார்.

ஈஷா யோகா மையம் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டுவருவதால் இந்த விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என சூழல் அமைப்புகள் வலியுறுத்திவந்ததுடன் இது தொடர்பாக பல்வேறு அமைப்புக்களின் சார்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More