Home இலங்கை தமிழ் மக்களது நலன்கள் குறித்த மகஜர் ஐநாவுக்கு அனுப்பப்படவுள்ளது:-

தமிழ் மக்களது நலன்கள் குறித்த மகஜர் ஐநாவுக்கு அனுப்பப்படவுள்ளது:-

by admin


தமிழ் மக்களது நலன்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் ஒன்றினைத் தயாரித்து வருவதாக வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தற்போது மகஜரை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் நாளை அந்த குழவின் சந்திப்பும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த மகஜரின் தயாரிப்பு வேலைகள் நிறைவடைந்ததும் எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபையின் அமர்வில் அங்கீகரிக்கப்பட்டு ஜெனீவா செல்லவுள்ள உறுப்பினர் ஒருவர் ஊடாகவும் நேரடியாக கையளிக்க தீர்மான வித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More