Home இலங்கை சம்மந்தனின் கருத்துக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் கண்டனம்

சம்மந்தனின் கருத்துக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் கண்டனம்

by admin
ஒட்டுமொத்த தமிழ் மக்களும்,  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசுக்கு ஜநா கால நீடிப்பு வழங்க கூடாது என்று இருக்கும்  போது சம்மந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்துக்கு   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு  போராட்டத்தை   மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை   திங்கள் மாலை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் தெரிவிக்கையில்
ஒட்டுமொத்தமான த மிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள் எற்கனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க  மறுத்தவர்கள்  ஜநாவில் ஒப்புக்கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள்  இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்யப்போகின்றார்கள்.
இராணுவத்தை விசாரிக்கமுடியாது சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பிற்பாடு கால அவகாசம் எதற்கு? இது சம்மந்தனுக்கு விளங்கவேண்டும் எற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜநா இல்ங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.  பல மாகாண  உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள் எனவே சம்மந்தன் அவர்கள் இதனை விளங்கிகொண்டு உடனே  கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஜநாவுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது எனது கட்சி சர்ந்தும் தமிழ் மக்கள் சார்ந்தும  நான் முன் வைக்கும் கோரிக்கையாகும் எனத்தெரிவித்த அவர்
இலங்கை அரசாங்கம் தமதா உறவுகளை தேடித்தராது, இங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருகிறது,  என்பதனை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்  எனவேதான்  ஒரு சர்வதேச விசாரணைக்கு ஊடாக மாத்திரம்தான்   கண்டுபிடிக்க முடியும் அது மாத்திரம் மன்றி  உண்மைகள் வெளிக்கொண்வரப்படவேண்டும். ஆதாவது  காணாமல் போனவர்கள் எங்கிருகின்றார்கள் அல்லது இருகின்றார்களா இல்லையா அல்லது இல்லையென்றால்  அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா அவ்வாறு கொலை கொலை செய்யப்பட்டிருந்தால் யாரால் கொலை செய்யபட்டார்கள் என்ற உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் எனவேதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச விசாரணை என்பது  மிக மிக  அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது.எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More