Home இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் – அர்ஜூன ரணதுங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் – அர்ஜூன ரணதுங்க

by admin

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்குவகும் பணிகளை எதிர்வரும் நாட்களில்  மேற்கொள்வதற்கு  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு காணிகளை வழங்கிய அனைத்து மக்களிற்கும் சாதாரணத்தை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனவும்  காணிகளை வழங்கியதன் மூலமாக தம்முடைய இருப்பிடங்களை இழந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காணிகளை இழந்தவர்களிற்கு இழப்பீடுகளை வழங்குவதற்கும்  அம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டும் அரசாங்கம் 2 பில்லியன்கள்  ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது எனவும்   அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி காரணமாக காணிகளை இழந்த மக்களிற்கு இழப்பீடுகள் வழங்கும் செயன்முறை தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். அ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More