Home இலங்கை பயங்கரவாதிகளி;ன் ஆயுதங்களை பாதாள உலகக்குழுவினர் பயன்படுத்துகின்றனர்

பயங்கரவாதிகளி;ன் ஆயுதங்களை பாதாள உலகக்குழுவினர் பயன்படுத்துகின்றனர்

by admin


பயங்கரவாதிகளின் ஆயுதங்களை பாதாள உலகக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர் என மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்திய ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டவை என  குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை இ;ல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More