Home இந்தியா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை

by admin


மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.  டெல்லி பல்கலை கழகத்தை சேர்ந்த ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்த ஜி.என். சாய்பாபா  தடை செய்யப்பட்ட மவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்  சுமத்தப்பட்டு கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பல்கலை கழகத்தில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.   இந்த வழக்கு இன்றையதினம் கட்சிரோலி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில்  சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் ஹேம் மிஷ்ரா, முன்னாள் பத்திரிக்கையாளர் பிரசாந்த் ராஹி மற்றும் 3 பேருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More