Home இலங்கை போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாவிட்டால போராட்டங்களை நிறுத்தி விட முடியும் :

போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாவிட்டால போராட்டங்களை நிறுத்தி விட முடியும் :

by admin


போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் சேகரிக்கக்கூடாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு நாட்டில் தனியான ஓர் இடத்தை அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அவர் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்படுவதனால் பொதுமக்களே அதிகளவு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்கள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தனியான ஓர் இடத்தில் போராட்டங்களை நடாத்த ஏற்பாடு செய்து தேவை என்றால் அந்த இடத்திற்கு ஊடகவியலாளர்களை அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் ஓருவார காலத்திற்கு வெளியிடாவிட்டால், இந்தப் போராட்டங்களை நிறுத்தி விட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More