Home இலங்கை சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

by admin

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படலாம் எனவும், 2015 ஆம் ஆண்டுப் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமென அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. அமெரிக்காவினால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக்கூட்டத்திலேயே மேற்படி கருத்துக்கள் வெளியிட்டிருந்தது.

அத்துடன் பிரித்தானியா உட்பட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில், சர்வதேச பங்களிப்புடன் இலங்கை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளனர்.   இதன்போது பங்குபற்றியிருந்த இலங்கைத் தூதுக்குழுவின் பிரதிநிதி, அறிக்கையினை முழுமையாக ஆராய்ந்த பின்னரே  இலங்கை அரசாங்கம் பதிலளிக்குமெனவும், பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பிரேரணையானது வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அனைத்து நாடுகளின் அனுசரணையுடன் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கும் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More