Home இலங்கை தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை இலங்கை துரிதப்படுத்தும் என இந்தியா நம்பிக்கை

தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை இலங்கை துரிதப்படுத்தும் என இந்தியா நம்பிக்கை

by admin

தமிழக மீனவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையை புரிந்து கொண்டு இலங்கை விசாரணைகளை துரிதப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள  அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதாக இலங்கை அரசாங்கம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அறிவித்துள்ளது.  அண்மையில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஒர் மீனவர் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படையினர் முற்றுமுழுதாக நிராகரித்துள்ள போதிலும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்தியாவிற்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More