அரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றில் ஜனநாயகமாக செயற்பட அனுமதியளிக்காது அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை எனவும் அ வர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment