Home விளையாட்டுமெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும்

மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும்

by admin


பார்சிலோனா மற்றும் ஆர்ஜென்ரீனா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயனல் மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவே அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெஸ்சி தற்போது ஆர்ஜென்ரீனா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வென்றது.

இப்போட்டியின்போது துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தியமை நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால் விசாரணா நடத்திய பிபா ஒழுங்குமுறை ஆணையம்  மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன் 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்துள்ளது.

தடையை எதிர்த்து மெஸ்சியும் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More