Home இலங்கை கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம்

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்ய தீர்மானம்

by admin


கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ்  900 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை செய்வதாக  இன்று 06-04-2017 தீர்மானிக்கப்பட்டுள்ளது . கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் செய்யப்படுகின்ற சிறுபோக நெற்செய்கை இவ்வருடம் குளத்து நீர் பத்தடியில்  காணப்படுவதனால் குளத்தின் நீரின்  அளவை கருத்திற் கொண்டு  கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார்   900 ஏக்கரில் சிறுபோக  நெற்செய்கை  செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது

இன்றையதினம்  கிளிநொச்சி கோவிந்தன்கடைச்  சந்தியில் அமைந்துள்ள இரணைமடு திட்ட முகாமைத்துவ  அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும்  பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான  எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் நடைபெற்ற  2017 ம் ஆண்டிற்கான  இரணைமடுக்குளத்தின் கீழான   சிறுபோக பயிர்ச் செய்கைக்கான  முன்னோடிக்கூட்டமும்  திட்ட முகாமைத்துவ குழுவினுடைய எதிர்கால   நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பாட்ட  கலந்துரையாடலிலேயே  இவ் தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது

இக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More