Home இலங்கை நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் ஆன்மீக தலைவர்கள் முன்னணி வகிக்கவேண்டும் – ஜனாதிபதி

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் ஆன்மீக தலைவர்கள் முன்னணி வகிக்கவேண்டும் – ஜனாதிபதி

by admin

நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

இன்று தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற ‘எரபது வசந்தம்’ தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அனைத்து இனங்களுக்கு மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே வரலாற்று காலம்தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி  இன்றும் அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி பலமான மக்கள் சமூகமாக நாம் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More