99
கடும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அநேகமான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும்; சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் இடிமின்னல் தாக்குதல்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love