Home உலகம் துருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு

துருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு

by admin

துருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கு சுமார் 25 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.  ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு   (Tayyip Erdogan)   ஆதரவாகவே மக்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர்.  நேற்று நடைபெற்ற கருத்துக்கணிப்பின் போதே இவ்வாறு வாக்களித்துள்ளனர்.  இது   துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கணிப்பாக கருதப்படுகின்றது.

இந்த வாக்களிப்பின் போது சுமார் 1.3 மில்லியன் மக்கள் புதிய அரசியல் சாசனத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.   சுமார் 200 வருடங்களாக பேசப்பட்டு வந்த துருக்கியின் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர் எனவும்  இது துருக்கியின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் எனவும்  எர்டோர்கன்  தெரிவித்துள்ளார்

புதிய அரசியல் சாசனத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவு?

Apr 14, 2017 @ 02:34
புதிய அரசியல் சாசனத்திற்கு துருக்கி மக்கள் ஆதரவாக வாக்களிக்கலாம் எதிபார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரையிப் எர்டோர்கன்   (Tayyip Erdogan)   க்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிக்கக் கூடிய சாத்தியம் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட உள்ளது.  இதற்கு அனுமதி வழங்குமாறு கோரியே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பிலான கருத்துக் கணிப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என தெரியவந்துள்ளது. மிகவும் குறுகிய பெரும்பான்மை பலத்துடன் இந்த கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கு சாதகமான முடிவு கருத்துக் கணிப்பில் கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More