Home இலங்கை பழி போடுவதில் காலம் கடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – நாமல்

பழி போடுவதில் காலம் கடத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – நாமல்

by admin

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க அ ரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல அனர்த்தங்களை நாடு சந்தித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர்  அவற்றுள் அரநாயக்கமண்சரிவு ,சாலாவ ராணுவ முகாம் விபத்து, கொலன்னாவை வெள்ளம் உள்ளிட்டவை முக்கியமானவையாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்கவில்லை என   தெரிவித்த அவர் அரணாயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையிலே கடந்த வாரம் மீத்தொட்டுமுல்லை குப்பை சரிவு இடம்பெற்றுள்ளது எனவும் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள முடியாத இந்த அரசாங்கம் ஒருவர் மீது ஒருவர் பழி போட்ட வண்ணம் காலத்தைகடத்துகிறது எனவும்  அனைத்து அனர்த்தங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி அவர்களை இயல்பு வாழ்க்கைக்குகொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More