Home இலங்கைபன்னங்கண்டி மக்களின் போராட்டம் 28வது நாளாகவும் தொடர்கின்றது

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 28வது நாளாகவும் தொடர்கின்றது

by admin

கிளிநொச்சி கரைச்சி பன்னங்கண்டி பகுதியில் தாங்கள் குடியிருந்து வரும் தனியார் காணியைத் தமக்கு வழங்குமாறு கோரி முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப்போராட்டம் தொடர்ந்தும் 28வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் இரணைமடு குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்;படும் போது பயிர் செய்கைக்கென தனியார்  ஒருவருக்கு வழங்கப்பட்ட சரஸ்வரதி கமம் பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு முதல் காணிகளற்ற 120 வரையான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.

இந்நிலையில் மீள்குடியமர்வின் பின்னர் காணி உரிமம் இன்மையால் இவர்களுக்கான வீட்டுத்திட்ட வசதிகள் உள்ளிட்ட எதனையும் வழங்க முடியாத நிலையில் இருந்து வருவதனால் கடந்த 28வது நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் கோரிக்கைகளை அரச அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர்.

இதற்கான தீர்வாக குறித்த காணி உரிமையாளர் தாமாக முன்வந்து காணியினை வழங்கும் போது தான் இதற்கான தீர்வைப் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More