Home இலங்கை ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 7 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு

ஊடகவியலாளர் அமரர் ரூபனின் 7 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு

by admin
ஊடகவியலாளர் அமரர் சி.செ.ரூபனின் 7 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நாளை (25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பொன்னாலை கலாசார மண்டபத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதான நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரனும், தொடர்ந்து நினைவு அஞ்சலி உரைகளை யாழ்.தினக்குரல் ஆசிரியர் வி.அற்புதானந்தன், யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும் யாழ்.ஊடக அமையத் தலைவருமான ஆ.சபேஸ்வரன், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார், காலைக்கதிர் உதவி ஆசிரியர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.
அதனை தொடர்ந்து அமரர் ரூபன் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கும் பொன்னாலை வெண்கரம் இலவசக் கல்வி நிலைய மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் மனனப் போட்டி என்பவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குமான பரிசில் வழங்கலும்  இடம்பெறவுள்ளது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More