Home இலங்கை நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி

நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி

by admin

 

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,  இந்த அனைத்து பிரசாரங்களும் அரசாங்கத்திற்கு எதிரான சிலரினால் முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்று (29) முற்பகல் மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அனைத்து நாடுகளும் இன்று இலங்கையுடன் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் மூலம் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப முடியும் என்றும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். இது குறித்து மக்கள் உண்மையான தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு, அரசாங்கத்துடனும் மாகாண சபையுடனும் இணைந்து ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More