Home இலங்கை போராட்டத்தால் முடங்கியது வடக்கு மாகாண சபை – சபை அமர்வு 25 ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு.

போராட்டத்தால் முடங்கியது வடக்கு மாகாண சபை – சபை அமர்வு 25 ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு.

by admin

வேலை கோரி போராடிய பட்டத்தாரிகளின் போராட்டத்தினால் வடமாகாண சபை அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானத்தால் ஒத்தி வைக்கபப்ட்டு உள்ளது. வடமாகாண சபையின் 92 ஆவது அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற இருந்தநிலையில் இன்று காலை தொடக்கம் பேரவைக் கட்டடத்தை முற்றுகையிட்டு வேலை கோரி பட்டதாரிகள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதன் போது பேரவைக் கட்டட வாயில் கதவுகளை பட்டதாரிகள் பூட்டு பூட்டி மூடி இருந்தனர். அவ்வேளை அங்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்ல பட்டதாரிகள் அனுமதிக்காத நிலையில் முதலமைச்சர் அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றார்.

அந்நிலையில் போராட்டம் ஆரம்பமாக முன்னர் அவைக்கு வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் . போராட்டம் ஆரம்பமான பின்னர் அவைக்கு வந்த உறுப்பினர்கள் அவைக்கு செல்ல முடியாது வெளியே காத்திருந்தனர். அந்நிலையில் அவைத்தலைவர் இன்றைய சபை அமர்வுகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More