Home இலங்கை இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது – சரத் பொன்சேகா

இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது – சரத் பொன்சேகா

by admin

இறந்தவர்களை நினைவு கூரவும்   அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும்   எவருக்கும்  முடியும்  என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முல்லிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து  கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும்  யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் போது உயிரிழந்த எந்தவொருவரையும் அவரது உறவினர்கள் நினைவு கூர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சிவாஜிலிங்கம் பலம்மிக்க ஒருவர் இல்லை எனவும், அது குறித்து கவனம் செலுத்தி காலத்தை செலவிடுவது அர்த்தமற்ற வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More