Home இலங்கை கால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

by admin


கால வரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவின்த சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் நேற்று முன்தினம் சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

முன் அறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அரசாங்கம் துரித கதியில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More