Home இந்தியா டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரி வளாக சுவர்களில் ஐ.எஸ்க்கு ஆதரவாக வாசகங்கள்:-

டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரி வளாக சுவர்களில் ஐ.எஸ்க்கு ஆதரவாக வாசகங்கள்:-

by admin

டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரி வளாகத்தில் இருக்கும் சுற்றுச்சுவர்களில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்-க்கு ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அப்பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சில மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுளடளதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் சமூகசேவை துறையின் சுவர்களில் நக்சல், சிறப்பு ஆயுத சட்டம், ஓர்பாலின திருமணம் ஆகியவற்றுக்கும் ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தமை தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More