Home இலங்கை இணைப்பு 2 கேப்பாப்பிலவில் நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதி

இணைப்பு 2 கேப்பாப்பிலவில் நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதி

by admin

கேப்பாப்பிலவில் மக்கள் வெளியேற முடியாத வகையில் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில்  குறித்த பகுதிக்கு சென்ற  மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்து்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவிவந்த பதற்றமான சூழல் தணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்களை, பிரதேசத்துக்குள் இராணுவத்தினர் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாப்பிலவு முகாம் பகுதியில் மக்களை அடைத்து வைத்தது இராணுவம்!

Jun 11, 2017 @ 12:45


கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்களை, பிரதேசத்துக்குள் இராணுவத்தினர் அடைத்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வழிபாட்டு பகுதிக்குள் மக்கள் பிரவேசித்தவுடன் பிரதான வாயிலை இராணுவத்தினர் மூடியுள்ளதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்திலுள்ள தமது கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற மக்களுடன் இணைந்து தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த மதகுருவும், தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை படையினர் மூடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேச செயலர் அங்கு சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேப்பாபுலவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More