Home இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

by admin


வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவூ தெரிவித்தும்  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை ஆளவிடு, மக்களுக்கான ஆளுநரை சந்திக்க மறுத்தவர்கள் பதவிக்காக ஆளுநரின் காலில் ஊழலுக்குத் துணை நின்றால்தான் பதவியில் நீடிக்கலாமா?  தமிழரசுக் கட்சியே முதல்வரும் ஊழலுக்கு உடந்தையாக வேண்டுமா? முன்னுதாரணமான முதலமைச்சரின் செயலுக்கு தடையா?  நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடன் இரத்துச் செய்,  எங்கள் முதல்வர் எங்களுக்கு வேண்டும்,  பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி,  நீதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்,  நீதியின் குரலை நீக்குவதற்கு நீங்கள் யார்? குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா? பதிவி ஆசையே நம்பிக்கையில்லா பிரேரணை, ஊழலை மறைக்க எதிரியூடன் கூட்டா? தமிழரசு கட்சியே நீ இலங்கை அரசின் கை கூலியா? கல்வி சீரழித்த கல்வி  அமைச்சர் வீட்டுக்குச் செல்ல வேண்டும், போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையூம் ஏந்தியிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More