Home இலங்கை குரோத உணர்வைத் தூண்டும் முனைப்புக்களை முறியடிக்க புலனாய்வுப் பிரிவினர் கடமையில்…

குரோத உணர்வைத் தூண்டும் முனைப்புக்களை முறியடிக்க புலனாய்வுப் பிரிவினர் கடமையில்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


குரோத உணர்வைத் தூண்டும் முனைப்புக்களை தடுக்கும் நோக்கில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இனக் குரோத உணர்வைத் தூண்டி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனக்குரோத செயற்பாடுகளின் பின்னணியில் இயங்கி வரும் அரசியல் மறைகரம் எது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

நாட்டில் மத இனக் குரோத செயற்பாடுகளை தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More