Home விளையாட்டு அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் கொடுப்பனவு திட்டத்தை வீரர்கள் நிராகரிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் கொடுப்பனவு திட்டத்தை வீரர்கள் நிராகரிப்பு

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் கொடுப்பனவு திட்டத்தை வீரர்கள் நிராகரித்துள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் ஒன்றியம் இவ்வாறு , கிரிக்கட் சபையின் கொடுப்பனவு முறைக்கு இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தரப்பிற்கும் இடையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் வீரர்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

இந்த முரண்பாடுகள் காரணமாக சில வேளைகளில் எதிர்வரும் போட்டிகள் தொடர்பில் குழப்ப நிலைமை ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More