Home இலங்கை கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தில் பருத்திதுறை இளைஞர் கழகம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தில் பருத்திதுறை இளைஞர் கழகம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்  இன்று  ஞாயிற்றுக்கிழமை 126 நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு  போராட்டத்தில் பருத்திதுறை சக்கோட்டை இளைஞர் மன்றத்தை சேர்ந்த நுற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டுள்ளனா்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நிரந்தர நல்ல தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் தொடர்ச்சியாக 126 நாளாக இரவு பகலாக  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திலேயே பருத்திதுறை சக்கோட்டை இளைஞர் கழகத்தைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் அருட்தந்தை எம்.கான்ஸ்போவர் தலைமையில் கலந்துகொண்டனா்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More