Home இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் விரோதம் பாராட்டாது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு  வழங்க அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மூடி மறைக்கும நோக்கில் அரசாங்கம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினையை இழுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருணாகல் சென்றிருந்த போது மாடு வளர்ப்போர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யப்படதாகவும் காவல்துறை மா அதிபரின் ஊரில் அதிகளவு மாடுகள் களவாடப்படுவதாகவும்  அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும்  விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து எவரும் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More