Home உலகம் ஈராக்கில் ஐ.எஸ் தற்கொலைதாரி நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி

ஈராக்கில் ஐ.எஸ் தற்கொலைதாரி நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈராக்கில் ஐ.எஸ் தற்கொலைதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் அகதிமுகாம் ஒன்றில் இவ்வாறு தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் ஒருவரைப் போன்று தற்கொலை அங்கி அணிந்த தீவிரவாதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.  இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களும் சிறுவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெயர் மக்கள் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் சுமார் 30 வீதமான மக்கள் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More