Home இலங்கை நிபந்தனை அடிப்படையில் இந்திய படகுகள் விடுவிக்கப்படும்

நிபந்தனை அடிப்படையில் இந்திய படகுகள் விடுவிக்கப்படும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிபந்தனை அடிப்படையில் இந்திய படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கைக் மீன்பிடி மற்றும நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடுமையான நிபந்தனை அடிப்படையில் சில இந்திய படகுகள் விடுவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இதுவரையில் எந்தவொரு இந்திய படகும் விடுவிக்கப்படவில்லை என  சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மீனவர்கள் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றால் நிபந்தனை அடிப்படையில், கடற்படையினரால் கைபற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும் எனத் தெரிவித்த  அவர் எவ்வாறெனினும் அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என  குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி முறையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் மீனவர் பிரச்சினை குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More