Home உலகம் மெக்சிகோவின் காபுல்கோ நகர் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 28 கைதிகள் உயிரிழப்பு:-

மெக்சிகோவின் காபுல்கோ நகர் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 28 கைதிகள் உயிரிழப்பு:-

by admin

மெக்சிகோவின் காபுல்கோ நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 28 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 2000 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று சிறைக் கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டள்ளது. கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கைதிகள் எதிர்த் தரப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் மோதலின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று, முன்தினம் மெக்சிக்கோவின் சினாலா மாநிலத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 26 பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More