இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை நிறுத்திக் கொள்ள முடியாது – பிரதமர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை நிறுத்திக் கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியதாகவும் இதனை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஏனைய மதங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.