Home இந்தியா ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்:-

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்:-

by admin

மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் உத்தேச சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு கப்பல்கள் படகுகளுக்கு இரண்டு கோடி ரூபா முதல் 20 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதனால் 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை என்படுன் இந்த வேலை நிறுத்தத்தால் பத்தாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More