Home விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது

by admin

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான,   டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 388 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆட்டமிழக்காமல் 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறேம் கிறீமர் 4 விக்கெட்டுகளையும் ஷோன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக, அசேல குணரட்ன தெரிவானார்.
இதேவேளை  ஜிம்பாப்வேக்கு எதிரான 391 ஓட்டங்களை  சேஸிங் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More