Home இலங்கை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடும் – கூட்டு எதிர்க்கட்சி

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடும் – கூட்டு எதிர்க்கட்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விரைவில் இழக்க நேரிடும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என  குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென    கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் எவரும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More