Home இலங்கை நல்லூர் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

நல்லூர் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் பின் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. அதில் யாழ்.மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர்  உயிரிழந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை  நாம் அடையாளம் கண்டு உள்ளோம் , துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை சேர்ந்தவர்.  அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அனலைதீவை சேர்ந்தவர்கள் கைது. 
அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவை சேர்ந்த இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிபதியின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்தே சுட்டார். 
நீதிபதியின் வாகனத்திற்கு முன்னே வீதி ஒழுங்கு நடவடிக்கைளை முன்னெடுத்து நீதிபதியின் மெய் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அதன் போது யாழ் – பருத்தித்துறை வீதியும், கோவில்  வீதியும் சந்திக்கும் சந்தியில் வீதியில் இறங்கி வீதி ஒழுங்குகளை மேற்கொண்டு உள்ளார்.
அதன் போது மதுபோதையில் அங்கிருந்த நபர் ஒருவருக்கும் , குறித்த பொலிஸ் உத்தியோகச்தருக்கும் இடையில் முரண்பாடு தோன்றி அவர்கள் இருவரும் முரண்பட்ட வேளையில் திடீரென பொலிஸ் உத்தியோகஸ்தரின் இடுப்பு பட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை மதுபோதையில் நின்ற நபர் எடுத்துள்ளார்.
அதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , மதுபோதையில் நின்ற நபரிடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பறிக்க முயன்ற போதே அந்நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
அதில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்தார். அதனை தொடர்ந்து அந்நபர் வீதியில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இவ்வாறாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதியின் 17 வருட மெய்பாதுகாவலர்.
இதேவேளை நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஹேமசந்திர (வயது 58) என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மெய்பாதுகாவலர் நீதிபதியின் மெய்பாதுகாவலராக கடந்த 17 வருடங்கள் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva July 23, 2017 - 1:49 pm

<<>>

இக்கதை, எந்த வகையிலாவது நம்பும்படியாகவா உள்ளது? அம்புலி மாமாக் கதையை விட இக்கதை ருசிகரமான இருக்கின்றதே!

இந்த விசாரணை அறிக்கையை வைத்துக் கொண்டுதான் போலீஸ் பேச்சாளர், ‘துப்பாக்கிதாரியின் குறி திரு. இளஞ்செழியன் அல்ல’, என்று அறிக்கை விட்டுள்ளாரோ? திரு. இளஞ்செழியனின் கூற்றுப்படி, துப்பாக்கிதாரி துப்பாக்கியைப் பயன்படுத்துவதில் நல்ல பரீட்சயமுள்ளவர், என்று கூறியிருப்பதோடு, 6 அடி தூரத்தில் கிட்டத்தட்டப் 10 நிமிடங்களாக அங்கு நின்றிருக்க நீதிபதி, அந்நபரின் மதுபோதை குறித்து எதுவும் கூறவில்லையே? மாறாக, அந்நபரின் குறி தானேயெனவும் கூறியிருக்கின்றாரே?

இதையும் கூட, ‘Pre 2009 mindset’, என்று கூறிக் கொக்கரிக்கச் சிலர் எம்மிடையே இருக்கத்தான் செய்வார்கள்? திரு. சம்பந்தன் நேற்று மூக்கால் சிந்தியது குறித்து அவர்கள் என்ன சொல்லப் போகின்றார்களோ? இன – மத வெறி பிடித்த (எல்லோரும் அல்ல) சிங்கள பெரும்பான்மையினரிடம், திரு. ரணில், திரு. மைத்திரிபால சிறிசேன உட்படத் திரு. சம்பந்தரின், ‘ காக்கா- நரிக் கதை’, என்றைக்கும் எடுபடாது, நண்பரே!

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More