Home விளையாட்டு மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து மகளிர் அணி நான்காவது முறையாக கைப்பற்றியது

மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து மகளிர் அணி நான்காவது முறையாக கைப்பற்றியது

by admin

இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற     மகளிர் உலக கோப்பையை இங்கிலாந்து மகளிர்  அணி  நான்காவது முறையாக   கைப்பற்றியுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்  போட்டியிட்ட நிலையில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது.  அதிகபட்சமாக ஸ்சிவர் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களைப் பெற்று  எடுத்து ஆட்டமிழந்தார். டெய்லர் 45 ஓட்டங்களைப பெற்றார்.

இந்திய அணி சார்பில்  ஜுலன் கோஸ்வாமி     3 விக்கெட்டுக்களும், பூனம் ராவத்   2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 228 ஓட்டங்கள் என்ற     வெற்றி   இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில்  219 ஓட்டங்களைப் பெற்ற நிலையில்  எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து மகளிர் அணி 9 ஓட்ட  வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More