Home இலங்கை புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by admin

இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்துக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று  ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

உங்களது அறிவும் ஆட்சித் திறனும் சுபிட்சத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும். இந்த உயர்ந்த ஸ்தானத்தில் உங்களது பதவியானது உங்களது நாடு அதன் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான முயற்சியில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என ஜனாதிபதி அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் பலமான கூட்டுறவு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய இந்திய ஜனாதிபதியுடன் நெருங்கிப் பணியாற்ற தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More