Home இலங்கை நல்லூர் துப்பாக்கி சூடு – முன்னாள் போராளி என்கிறது பொலிஸ் தரப்பு – வதந்தி என்கிறார் மனைவி.

நல்லூர் துப்பாக்கி சூடு – முன்னாள் போராளி என்கிறது பொலிஸ் தரப்பு – வதந்தி என்கிறார் மனைவி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லூர் பகுதியில் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அன்றைய தினம் இரவினை யாழ்.கோம்பயன் மணல் மயானத்தில் கழித்ததாக யாழ்.போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் ஆலய பின் வீதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை மற்றுமொரு மெய்பாதுகாவலர் காயமடைந்து இருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
குறித்த சந்தேக நபர் போலீசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் , மாச்சனின் சவாலுக்காகவே துப்பாக்கியை பறித்தேன் என தெரிவித்தார்.அது தொடர்பில் மேலும் வாக்கு மூலத்தில் தெரிவிக்கையில் ,
சவாலுக்கவே துவக்கை எடுத்தேன். 
சனிக்கிழமை நல்­லூ­ருக்கு பின் வீதியில் உள்ள எனது வீட்­டில் மது அருந்தி விட்டு , அந்­தச் சந்­தி­யில் (பருத்தித்துறை வீதி , கோவில் வீதி சந்தி ) வந்து நின்றோம். அப்போது கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவரை காட்டி  ” உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்­துச் சுடடா பார்ப்­பம் ” என்று எனது மச்­சான் சவால் விட்டான். அப்போது நான்  பொலிசாரின்  துவக்கை எடுக்­கேக்க அது தெரி­யா­மல் சுடு­பட்­டு விட்­டது.
ஸ்கூட்டரை பறித்தேன். 
அதன் பின்­னர் பிஸ்­ட­லைக் காட்டி வீதி­யால் வந்­த­வ­ரது ஸ்கூட்­ட­ரைப் பறித்­து. ஸ்கூட்­ட­ரில், ஆடி­ய­பா­தம் வீதி ஊடாக கல்­வி­யன்­காட்­டுப் பகு­திக்­குச் சென்று அங்­கி­ருந்து அரி­யா­லைக்­குச் சென்­றேன்.
அரி­யாலை பேச்சி அம்­மன் கோயி­லுக்­குப் பின்­னால் ஸ்கூட்­ட­ரைப் போட்­டு­விட்டு திரு­ந­கர் பகு­தி­யில் உள்ள பெரி­யம்மா வீட்­டுக்­குச் சென்­றேன்.
மயானத்தில் இரவை கழித்தேன். 
அங்கு பெரி­யம்­மா­வி­டம்,  போதை­யில் பொலிஸ் ஒருவருக்கு அடித்­து விட்டேன். பொலிஸ் என்­னைத் தேடுகிறது என சொல்லி. பெரி­யம்மா வீட்­டி­லேயே உடையை மாற்­றி­விட்டு ஓட்­டு­ம­டம் பகு­தி­யில் உள்ள கோம்­ப­யன்­ம­ணல் சுட­லை­யில் தான் அன்­றைய இர­வைக் கழித்­தேன்.
சரணடைந்தேன். 
மறு­நாள் பகல் நாவந்­து­றை­யில் உள்ள உற­வி­னர் வீட்­டில் நின்­றேன். அன்­றி­ரவு கொட்­ட­டி­யில் உள்ள மாமா­வின் வீட்­டுக்­குச் சென்­றேன். நல்­லூ­ரில் நடந்த சம்­ப­வத்தை மாமா அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும்.  ஏனெ­னில், என்னை அங்கு கண்­ட­தும் மாமா உட­ன­டி­யாக எனது அப்­பா­வுக்கு அலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி நான் வந்­த­தைக் கூறி­னார். மாமா என்னை பொலி­ஸில் சர­ண­டை­யு­மாறு கூறி­னார். அதன்­படி மாமா­வு­டன் வந்து பொலி­ஸில் சர­ண­டைந்­தேன். என போலீசாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார் என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சந்தேக நபரின் உடைகள் மீட்பு. 
அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த நபரிடம் வாக்­கு­மூ­லம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட பின்­னர், திரு­ந­க­ரில் உள்ள சந்­தே­க­ந­ப­ரின் பெரி­யம்மா வீட்­டுக்கு பொலிஸ் வாக­னத்­தில் கறுப்­புத்­து­ணி­யால் மூடிய நிலை­யில் சந்­தே­க­ந­பர் அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.
துப்­பாக்­கிச் சூடு நடத்­தும்­போது அணிந்­தி­ருந்த உடை­கள் உள்­ளிட்ட சில பொருட்களை அங்கு போலிசார் மீட்­­டனர்.
புலிகளின் சைபர் படைப்பிரிவில் இருந்தார். 
சந்­தே­க­ந­பரான சிவ­ராசா ஜெயந்­தன் (வயது–39). எனும் குறித்த நபர்  1995ஆம் ஆண்­டி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு கால பகுதியில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ‘சைபர்’ பிரிவு  படை­ய­ணி­யில் இருந்­துள்­ளார்.
1998ஆம் ஆண்டு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான கடி­தம் கொடுத்­துள்­ளார். அமைப்­பி­லி­ருந்து இடை­யில் வில­கு­வ­தன் கார­ண­மாக விடு­த­லைப் புலி­கள் தண்­டனை கொடுத்­துள்­ள­னர். அதன் பிரகாரம் விடுதலை புலிகளின் இர­ணை­மடு முகா­மில் சமை­யல் வேலை செய்­யும் தண்­டனை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
இரண்டு திருமணம். 
அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு கால பகுதியில்  முழங்­கா­வில் பகு­தி­யில் வசித்­துள்­ளார். முழங்­கா­வி­லில், யாழ்ப்­பா­ணம் மண்­கும்­பா­னைச் சேர்ந்த பெண்ணை திரு­ம­ணம் முடித்­துள்­ளார். இவ­ருக்கு 4 பிள்­ளை­கள் உள்­ள­னர்.
அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு மண்­கும்­பா­னில் சந்­தே­க­ந­பர் குடும்­பத்­து­டன் குடி­யே­றி­யுள்­ளார். ஆரம்­பத்­தில் கூலி வேலை­கள் செய்­துள்­ளார். பின்­னர் ஐஸ்­ பழ வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளார்.
இதன்­போது வேல­ணை­யில் மற்­றொரு திரு­ம­ணம் செய்­துள்­ளார். இவ­ருக்­கும் 4 பிள்­ளை­கள் பிறந்­துள்­ள­னர். தற்போது குறித்த நபர்  வேலணை 4ஆம் வட்­டா­ரத்­தில் தொடர்ந்து வசித்து வரு­கின்­றார். யாழ்ப்­பா­ணம் – குறி­காட்­டு­வான் பேருந்­துச் சேவை­யில் சார­தி­யாக பணி­யாற்றி வரு­கின்­றார். எனவும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் அமைப்பில் இருந்தவர் என்பது வதந்தி. 
எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி என கூறுவது வதந்தி. எனது கணவர் இதனை (துப்பாக்கி சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார் என சந்தேக நபரின் மனைவி தெரிவித்தார்.
கணவரை தேடி கடந்த சனிக்கிழமை முதல் பொலிசார் எமது வீட்டுக்கு பல தடவைகள் வந்து தேடுதல் நடத்தி எம்மை தீவிரமாக விசாரித்தார்கள். தற்போது எனது கணவர் பொலிசில் சரணடைந்து விட்டார்  என மேலும் தெரிவித்தார்.
8ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
குறித்த சந்தேக நபர் யாழ். பொலிசாரினால் யாழ். நீதவானின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­டார். அதனை தொடர்ந்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More