Home இந்தியா மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளுர் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:-

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளுர் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:-

by admin

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியயின் உள்ளுர் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் மாவோயிஸ்டுகளின் செயலாக இருக்கும் என பொலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் அண்மைக் காலமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் டார்ஜிலிங் பகுதியில் வன்முறை இடம்பெற்று வருகிறது.

முகநூலில் பதிவிட்ட கருத்து காரணமாக சில வாரங்களுக்கு முன்பு வன்முறை நிகழ்ந்தது. இந்த தொடர் வன்முறை சம்பவங்களால் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 48 வயதுடைய அஷிகுர் ரெஹ்மான் என்ற தலைவர் பராகனாஸ் மாவட்டத்தில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாயத் தலைவரான ரெஹ்மான் தலையில் புல்லெட் பாய்ந்து இறந்துள்ளார்.

இந்த கொலையை அடுத்து, நடுன்ஹாட் சந்தைப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More