Home இலங்கை குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தம்புள்ள குருணாகல் வீதியின், குருணாகல் பெத்தேகமுவ பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும் வாகன சாரதியும் மற்றுமொரு பயணியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். டிப்பரின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More