Home இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலக வேண்டும் – டிலான் பெரேரா

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலக வேண்டும் – டிலான் பெரேரா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க பதவி விலக வேண்டுமென ராஜாங்க அமைச்சரும், கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியதனைப் போன்றே, துமிந்த திஸாநாயக்கவும் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமுர்த்தி கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு எதிராகவும்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்; கோரியுள்ளார்.

அத்துடன் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியலை விட்டு விலகிச் செல்ல வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More