Home இலங்கை ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இளைஞர் ஒருவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இளைஞர் ஒருவர் கைது

by admin


ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதான  ரவீந்திரன் தருசன்   என்ற இளைஞரே இன்று காலை  இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் முகநூலில்  பதிவேற்றப்பட்டிருந்த ஆவா குழுவைச் சேர்ந்த நபர்களுடன்   எடுத்த  புகைப்படத்தை ஆதாரமாக வைத்தே குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம்  விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர் எனவும் விசாரணைகளின் பின்னர் அவர் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More