குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் பிரதிநிதிகள் குழு ஒன்றினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று மாலை முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இச்சந்திப்பின் போதே இராணுவத் தளபதியை தொடர்பு கொண்ட சந்திரிக்கா மக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பில் ஈடுபட்ட மக்கள தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment