Home உலகம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மான்டில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்;தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெல்மான்ட் மாகாணத்தின் நாவா மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் படையினரும் பொதுமக்களும்   உயிரிழந்துள்ளனர். நாவா மாவட்டத்தை தலிபான்களிடமிருந்து மீட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் படையினர் அறிவித்து சில மாதங்களின் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More