Home இலங்கை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்று (ஓகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் தாம்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  அனலதீவுக்கு மேற்கு திசையில் 8.5 கடல் மைல்கள் தூரத்தில்   கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்திய படகு மற்றும் மீனவர்களை  அவதானித்ததாகவும் அதனையடுத்து உடனடியாக செயற்பட்டு 04 மீனவர்களையும் மீட்டதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

பின்னர் அவர்களுக்குத் தேவையான முதல் உதவி உணவு மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கி காங்கேசன்துறை  கொண்டு சேர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  வட கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை நீர் முழ்கி சிறப்பு குழுவினரால் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  மீட்டபட்ட 04 மீனவர்களையும்  இந்தியாவுக்கு மீண்டும் அனுப்புவதுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More